முதல் உலகப்போரின்போது, பிரிட்டிஷ் ராணுவப் பிரிவின்கீழ் போரிட்டு உயிர் நீத்த இந்தியர்களின் தியாகத்தை மறக்கமுடியாது : அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நெகிழ்ச்சி
Oct 31 2014 10:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதல் உலகப்போரின்போது, பிரிட்டிஷ் ராணுவப் பிரிவின்கீழ் போரிட்டு உயிர் நீத்த இந்தியர்களின் தியாகத்தை, பிரிட்டன் என்றைக்கும் மறக்காது என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடையாளமாக 6 போர் வீரர்களின் விவரக்குறிப்புகளையும் வெளியிட்டு சிறப்பித்தார்.
1914 ஆம் ஆண்டு, முதல் உலகப்போர் தொடங்கியதன் நூற்றாண்டு நிறைவு நாள், டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில்ல் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முதல் உலகப்போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்தார். பிரிட்டிஷ் ராணுவப் பிரிவில் பணியாற்றிய சுமார் 74 ஆயிரம் இந்திய வீரர்களின் சேவை மறக்க முடியாதது என்று குறிப்பிட்ட மைக்கேல் ஃபாலன், இந்தியர்களின் தியாகத்தை, பிரிட்டன் என்றைக்கும் மறக்காது என்றும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், அடையாளப் பூர்வமாக 6 போர் வீரர்களின் விவரக்குறிப்புகளையும் மைக்கேல் ஃபாலன் வெளியிட்டு சிறப்பித்தார்.