போகி பண்டிகை காரணமாக சென்னையில் பெருங்குடியில் அபாயகரத்தை எட்டிய காற்று மாசு : காற்றின் தரக்குறியீடு 306 ஆக பதிவானதால் மக்கள் அவதி
Jan 14 2024 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பெருங்குடியில் காற்றின் மாசு அபாயகரத்தை எட்டியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காலை முதலே பழைய பொருட்களை பொதுமக்கள் தீயிட்டு எரித்தனர். இதனால், சென்னையில் பல்வேறு பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால், காற்று மாசு அதிகரித்த நிலையில், பெருங்குடியில் காற்றின் தரம் 206 என்ற அபாய கரமான அளவை எட்டியுள்ளது. காற்று மாசு தர குறியீட்டு எண் மணலியில் 272, எண்ணூரில் 252, அரும்பாக்கத்தில் 234-ஆக பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று மாசு அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.