போகி கொண்டாட்டத்தால் சூழ்ந்த புகைமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 50 விமானங்களின் சேவை பாதிப்பு... தரை இறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிங்கப்பூர், லண்டன் விமானங்கள்
Jan 14 2024 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போகிப் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக சென்னையில் கடும் புகை மூட்டம் நிலவியதால் 50 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து போகி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். இதனால், சென்னை நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததுது. இதன்காரணமாக, சென்னை விமான நிலையத்தில், 50 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட விமானங்கள் சென்னை விமானத்தில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், பல்வேறு விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் நிலை ஏற்பட்டது. புகை மூட்டத்துடன், கடும் பனி நிலவியதால் வாகன ஓட்டிகளும் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.