டெல்லியில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் வேஷ்டி அணிந்து பங்கேற்ற பிரதமர் மோடி : பொங்கல் வைத்தும், பசு மாட்டிற்கு மாலை அணிவித்தும் மரியாதை
Jan 14 2024 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, அணிந்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகை மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பொங்கலிட்டு வழிபட்ட பிரதமர், அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் என்று தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.