திறந்த வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு : மிக நீளமான கடல் பாலத்தை திறந்து வைக்க மகாராஷ்டிரா பயணம்
Jan 12 2024 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை திறந்து வைப்பதற்காக மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர், நாசிக்கில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றார். மும்பை-புனேவை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள அடல் சேது பாலத்தை பிரதமர் இன்று திறந்த வைக்கிறார். இதையொட்டி அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி, மலரால் அலங்கரிக்கப்பட்டிருந்த திறந்த வாகனத்தில் பயணித்தார். அப்போது சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.