உச்சநீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாமை தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார் : விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் வழக்கறிஞர்கள் தினத்தை ஒட்டி ஏற்பாடு
Jan 12 2024 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் இளம் வழக்கறிஞர்கள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தொடங்கி வைத்தார். இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்த இந்த ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.