பொங்கல் பண்டிகையை மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடும் வடமாநிலத்தவர்கள்
Jan 14 2024 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மகர சங்கராந்தியை வரவேற்கும் விதமாக, நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
தமிழர்களின் பொங்கல் பண்டிகை, வடமாநிலங்களில் மகர சங்கராந்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மகர சங்கராந்தியை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பக்தர்கள் புனித நீராடி உற்சாகமாக கொண்டாடினர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் சிப்ரா நதியில் புனித நீராடிய பக்தர்கள், மகாகாலேஷ்வர் கோவிலில் சுவாமியை தரிசித்து வழிபட்டனர். இதேபோல், வடமாநிலங்களில் நீர்நிலைகளில் புனித நீராடி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.