தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மிஞ்சிய பொங்கல் கரும்பை 24 ரூபாய்க்கு விற்றுத்தர வற்புறுத்தல் : அதிகாரிகள் மீது ரேஷன் கடை ஊழியர்கள் புகார்
Jan 14 2024 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் மிஞ்சிய பொங்கல் கரும்பை விற்பனை செய்து தரக்கூறி அதிகாரிகள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொங்கல் தொகுப்பிற்காக கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அதில், மீதமானவற்றை ஒரு கரும்பு 24 ரூபாய் வீதம் விற்பனை செய்து வழங்க வேண்டுமென பணியாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து, அதிகாரிகளின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.