மஹாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி நிதி முறைகேடுகள் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் உள்ளிட்ட 42 பேருக்கு அம்மாநில கூட்டுறவு ஆணையம் நோட்டீஸ்
Oct 31 2014 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி நிதி முறைகேடுகள் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் உள்ளிட்ட 42 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மாநில கூட்டுறவு வங்கிக்கு ஆயிரத்து 595 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் உள்ளிட்டோர் இயக்குநர்களாக இருந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு மஹாராஷ்டிர கூட்டுறவு வங்கியின் எதிர்மறை நிகர மதிப்பு மிக அதிகமாக இருந்ததாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக் ராவ் தலைமையிலான இயக்குநர்கள் குழு நீக்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநில கூட்டுறவு ஆணையர் தினேஷ் ஆல்கா கடந்த மே மாதம் வெளியிட்ட அறிக்கையில், மாணிக் ராவ் தலைமையிலான இயக்குநர்கள் குழு எடுத்த சில முடிவுகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, அஜித்பவார் உள்ளிட்ட 42 பேருக்கு, ஆயிரத்து 595 கோடி ரூபாய் இழப்பு தொடர்பாக அம்மாநில கூட்டுறவு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தவிர, காங்கிரஸ், சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.