மிகப்பெரிய மாநிலங்களில் சிறந்த ஆட்சி, கல்வி, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் - வேளாண் துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்திற்கு 2 விருதுகள் வழங்கி கவுரவிப்பு
Oct 31 2014 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களின் முதல்வர் ஜெயலலிதா தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழகம், அனைத்து துறைகளிலும் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்துறையில் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்திற்கு 2 விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மக்களின் முதல்வர் ஜெயலலிதா தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழகம், அனைத்து துறைகளிலும் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்குவதுடன், மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், சிறந்த ஆட்சி, கல்வித்துறை, விவசாயம், சுகாதாரம், கட்டமைப்பு, முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, "இந்தியா டுடே" நடத்திய ஆய்வில், நாட்டிலுள்ள 20 மிகப்பெரிய மாநிலங்களில், அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், வேளாண்துறையிலும் சிறந்து விளங்கும் மிகப்பெரும் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான 2 விருதுகளையும் தமிழக வேளாண்துறை அமைச்சர் திரு. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு, மத்திய அமைச்சர்கள் திரு. ரவிசங்கர் பிரசாத், திரு. வெங்கய்ய நாயுடு ஆகியோர் வழங்கினர்.