ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை வேரோடு அழித்தொழிக்க உலகம் உறுதி மேற்கொள்ள வேண்டும் : ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் வேண்டுகோள்
Nov 16 2015 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை வேரோடு அழித்தொழிக்க உலகம் உறுதி மேற்கொள்ள வேண்டும் என துருக்கியில் தொடங்கியுள்ள ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு துருக்கியில் உள்ள Antalya நகரில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு வருகைபுரிந்த ஜி-20 நாடுகளின் தலைவர்களை, துருக்கி பிரதமர் Ahmet Davutoglu-வும் அவரது மனைவியும் வரவேற்றனர்.
அதனையடுத்து தொடங்கிய மாநாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட மவுனம் அனுசரிக்கப்பட்டது. மாநாட்டில் உரையாற்றிய அனைத்து ஜி-20 நாடுகளின் தலைவர்களும், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள், உலகம் முழுக்க தனது கோர நகங்களை நீட்டி வரும் தீவிரவாதத்தை அடியோடு அழித்து ஒழிக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் என வலியுறுத்தினர்.