மங்கள்யானைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு நடத்தும் மற்றொரு விண்கலத்தை 2018-ம் ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ நிறுவனம் திட்டம்
Oct 31 2014 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மங்கள்யான் வெற்றியைத் தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு நடத்தும் மற்றொரு விண்கலத்தை 2018-ம் ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியதைத் தொடர்ந்து, அந்த விண்கலம் தற்போது செவ்வாய்கிர சுற்று வட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த கட்டமாக செவ்வாய்கிரகத்தில், தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள மற்றொரு விண்கலத்தை 2018-ம் ஆண்டு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கவும், ஊர்ந்துசென்று ஆய்வு மேற்கொள்ளவும் சக்கரங்களுடன் கூடிய நகரும் கருவியும் இடம்பெற்றிருக்கும். இத்தகவலை தெரிவித்த இஸ்ரோ அதிகாரி, இதற்காக புதிய தொழில்நுட்ப ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.