வங்கி ஏ.டி.எம். சேவைகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு - மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் முறை இன்று முதல் அமல்
Nov 1 2014 6:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கிக் கணக்கு வைத்துள்ளோர் அதற்கான ஏ.டி.எம்.-ல் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது.
வங்கிக் கணக்கு வைத்துள்ளோர் பணம் எடுப்பதற்காக 24 மணிநேர சேவையான ஏ.டி.எம். மையங்களையே பயன்படுத்துகின்றனர். ஏ.டி.எம். சேவைகளை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இலவச சேவை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த சேவைகளில், கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து வருகிறது. வங்கிக் கணக்கு வைத்துள்ளோர், கணக்கு வைத்திறாத மற்ற வங்கி ஏ.டி.எம்-களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டிருந்தது. இது, பின்னர் 3 முறையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், சொந்த கணக்கு வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. ஏ.டி.எம். எந்திரங்களை பொருத்துதல், உள்பறிமாற்றத்தில் ஏற்படும் செலவு போன்றவற்றை காரணம் காட்டி ஏ.டி.எம். பரிமாற்றங்களுக்கு கட்டணம் விதிக்க வங்கி சங்கங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.