26-ம் தேதி இந்தியாவில் புதிய 5G ஸ்மார்ட் போன்களை வெளியிடும் சாம்சங் : புதிய வசதிகளுடன் A15 மற்றும் A25 ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது
Dec 21 2023 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் 26-ம் தேதி இந்தியாவில் இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் வெளியிட உள்ளது. புதிய 5G ஸ்மார்ட்போன்களான A15 மற்றும் A25 ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் சாம்சங் நிறுவனம் வெளியிடுகிறது. முன்பே வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இரண்டு மாடல்களும் தற்போது இந்தியாவில் சாம்சங் வெளியிடப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே 6.5 இன்ச் சூப்பர் அமோல்டு திரையும், பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்களும் உள்ளன. மேலும், புதிய ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 25வார்ட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய, 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.