கார் உற்பத்தி தொழிற்சாலை விற்கும் முடிவை ஒத்திவைத்தது ஃபோர்டு நிறுவனம் : மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க யோசித்து வரும் ஃபோர்டு நிறுவனம்
Dec 21 2023 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் இருந்து வெளியேறும் முடிவை மீண்டும் பரிசீலிக்க முடிவு செய்துள்ள போர்டு நிறுவனம் சென்னை அருகே உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை விற்கும் முடிவை ரத்து நிறுத்தி வைத்துள்ளது. சென்னை அருகே மறைமலைநகரில் 350 ஏக்கர் பரப்பளவில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50ஆயிரம் கார்களையும், 3 லட்சத்து 40ஆயிரம் எஞ்ஜின்களையும் உற்பத்தி செய்து வந்த போர்டு நிறுவனம் பொருளாதார மந்த நிலை காரணமாக, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மூடப்பட்டது. தொடர்ந்து போர்டு தொழிற்சாலையை விற்க ஜே.எஸ். டபிள்யூ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தி வந்த அந்நிறுவனம் தற்போது விற்கும் யோசனையை நிறுத்தி வைத்துள்ளது. மீண்டும் கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து போர்டு நிறுவனம் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.