முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் அ.இ.அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சிறப்பு வழிபாடு

Sep 30 2016 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில், அ.இ.அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில், தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திரளான கிராமிய கலைஞர்கள் மாறு வேடங்களில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு நடத்தினர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், திருவொற்றியூரை அடுத்த ராஜா சண்முகம் நகர் அருள்மிகு தேவி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான கழகத்தினர் பங்கேற்றனர்.

பொன்னேரியை அடுத்த இலுப்பாக்கம் கிராமத்திலுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில், திரளான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பொழிச்சலூர் அருள்மிகு பிடாரி கள்ளியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு திருமலை வையாவூர் ஆலயத்தில், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான கழகத்தினர் இதில் கலந்துகொண்டனர்.

ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், மதுரை மாவட்டம், குருவித்துறை பகுதியில் அமைந்துள்ள குருபகவான் கோயில், பெருமாள் கோயில், சமேத வள்ளி அம்பாள் கோயில் ஆகிய ஆலயங்களில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இவ்வழிபாடுகளில் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி அ.இ.அ.தி.மு.க. சார்பில், பிரதிபெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில், அ.இ.அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், முதலமைச்சர் பூரண நலம்பெற வேண்டி, இன்மையில் நன்மை தருவார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள துர்க்கையம்மனுக்கு, 11 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் ஆலயத்தில், நகர அ.இ.அ.தி.மு.க சார்பில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோவை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், அருள்மிகு மாசாணியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், பாபநாசம் அருள்மிகு பாபநாசசுவாமி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், சாமராயப்பட்டி அருள்மிகு காளியம்மன் கோயிலில், அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க.வினர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தொடர்ந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00