மயிலாடுதுறை அருகே ஆபத்துதாரண ஆஞ்சநேய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா : மூலவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிப்பு
Jan 11 2024 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் அமைந்துள்ள ஆபத்துதாரண ஆஞ்சநேய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோயிலில் அதிகாலை சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு அயோத்தி சரயு நதிக்கரை புனித நீரைக் கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவருக்கு முத்தங்கி அலங்காரமும் உற்சவருக்கு தங்க கவச அலங்காரமும் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.