கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார் விநாயகர் சந்திரசேகரர் திருவீதியுலா - பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம்
Dec 6 2019 7:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும், திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 6-ம் நாள் திருவிழாவான இன்று, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு, சிறப்பு அபிகேஷம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் 63 நாயன்மார்களை போற்றும் விதமாக, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து 63 நாயன்மார்கள், விநாயகர் மற்றும் சந்திரசேகரரின் திருவீதியுலா நடைபெற்றது. வழி நெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து, அரோகரா கோஷம் எழுப்பினர்.