சபரிமலை வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் : 18-ஆம் படிக்கு மேல் செல்போன் பயன்படுத்த தடை
Dec 5 2019 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் சபரிமலை வீடியோவை அடுத்து, அங்கு செல்போனில் படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனிடையே,சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் 18-ம் படிக்கு மேல் பகுதிகளில் செல்போனில் படம் எடுப்பதற்கு தேவஸ்தானம் சார்பில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் மூலம் சன்னிதான பகுதியில் படம் எடுக்க அனுமதி கிடையாது என எழுதப்பட்ட வாசகங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.