தஞ்சை மாவட்டத்தில் ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
Sep 17 2019 9:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி மேலையூர் நடுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாத்தாயி அம்மன், ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 3 நாட்கள் மந்திரங்கள் முழங்க யாக கால பூஜைகள் நடத்தப்பட்டது. நான்காம் கால யாக பூஜை முடிந்து திருநன்னீர் கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியர்களால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கடங்களில் கலசங்களுக்கு நன்னீராட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
பின்னர் ஸ்ரீகாத்தாயி அம்மன், ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீமீனாட்சி அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.