திருவோண பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
Sep 9 2019 9:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவோண பூஜைகளுக்காக, சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 13-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலையில், இன்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து விளக்கேற்ற உள்ளார். பின்னர், இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, வரும் 10-ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படுகிறது. நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். 11-ஆம் தேதி, திருவோணத்தன்று, அய்யப்பனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி தீபாராதனை நடைபெறும். அன்று தேவசம்போர்டு சார்பில், பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும். வரும் 13ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.