சென்னை பாண்டிபஜாரில் நவ தானியங்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை - பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு
Sep 2 2019 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விநாயகர் சதுர்த்தியையொட்டி, இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சென்னை பாண்டிபஜாரில் நவ தானியங்களால் ஆன விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் ஆடை நிறுவனம் சார்பில், "இயற்கையை நேசிக்க வேண்டும் - இயற்கையோடு இணைந்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் - நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சம் தீர்ந்து இந்த வருடம் மழை பெய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நவ தானியங்களால் ஆன விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ தானியங்களால் அமைக்கப்பட்டிருக்கும் அந்த விநாயகரை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வழிபட்டு வருகின்றனர்.