வரதராஜர் கோயில் மாடவீதியில் காவல்துறை கெடுபிடி: மாடவீதி மக்களின் வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை - கருப்பு கொடியுடன் மக்கள் போராட்டம்
Jul 4 2019 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரதராஜ பெருமாள் கோயில் மாட வீதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் இல்லத்திற்கு இயல்பாக செல்ல காவல்துறை அனுமதிக்காததைக் கண்டித்து கருப்புக் கொடிகளுடன் போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வருவதால் காவல்துறை, தடுப்பு வைத்து அப்பகுதிவாசிகள் உள்ளே செல்ல அனுமதி மறுத்து வருகின்றது. தங்களின் இயல்பான வாழ்விற்கு இரு சக்கர வாகனங்கள் அவசியம் தேவைப் படுவதாகவும், இதற்கு காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் காவல் துறை கெடுபிடியை கண்டித்து மாடவீதியில் வசிக்கும் மக்கள், கருப்புக்கொடி ஏந்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.