பாடப் புத்தகத்தில் அய்யா வைகுண்டர் பற்றி தவறான குறிப்புகள் : உடனடியாக நீக்கக்கோரி அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழு, மாவட்ட ஆட்சியரிடம் மனு
Jun 27 2019 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
10 மற்றும் 11-ம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்திலும், கல்லூரி பாடத்திலும் அய்யா வைகுண்டர் சாமியைப் பற்றி தவறுதலான குறிப்புகள் மற்றும் போலியாக இடம் பெற்றிருந்த புகைப்படத்தை நீக்கக் கோரி, அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும், பதினொன்றாம் வகுப்பு வரலாறு பாடத்திலும் அய்யா வைகுண்டரின் வரலாறு குறித்து தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அய்யா வழியில் உருவ வழிபாடு இல்லாத நிலையில் அய்யா வைகுண்டர் என்று ஒரு புகைப்படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி சரியான குறிப்புகளோடு பாட புத்தகத்தை வெளியிடவும், அனைத்து வகுப்புகளிலும் தமிழ் பாடத்தில் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை புத்தகத்தில் உள்ள வாசகங்களை சேர்க்க கோரியும் அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, அடுத்த மாதம் மூன்றாம் தேதி, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.