கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா : ஏராளமான பக்தர்கள் தரிசனம்
May 24 2019 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, வாகன பவனியும், வடக்கு வாசலில் அன்னதானமும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆனந்தகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை யொட்டி, முக்கிய நிகழ்வான தீச்சட்டி ஏந்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள், அலகு குத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும், பறவை காவடி எடுத்தும், 20 அடி நீளமுள்ள அலகு குத்தியும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விழாவில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.