தைமாத அமாவாசையொட்டி, பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் அருகே பொய்யாதநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றன. பக்தர்கள் மிளகாய், பழங்கள், மூலிகை பொருட்கள், போட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதனையடுத்து பிரத்யங்கராதேவிக்கு யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் எருமபாட்டி அருகில் உள்ள ஒசக்கோட்டை சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில், கத்திபோடும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றன. சேலம் திருச்சி ஈரோடு தருமபுரி கிருஷ்ணகிரி பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேவாங்ககுல மக்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து இந்த திருவிழாவில் கலந்துகொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருநெல்வேலி மாநகரில் உள்ள தென்திருப்பதி ஸ்ரீ திருவேங்கடநாதபெருமாள், சங்காணி ஸ்ரீ வரதராஜபெருமாள், மகிழ்வண்ணபுரம் ஸ்ரீ மகிழ்வண்ணநாதா், திருநெ்லவேலி டவுண் கரியமாணிக்க பெருமாள், மற்றும் ஸ்ரீ லஷ்மி நரசிங்க பெருமாள் ஆகிய 5 கோயில்களில், தை திருவோணம் மற்றும் தை அம்மாவாசையை முன்னிட்டு 5 கருடசேவை சிறப்பாக நடைபெற்றன.
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி சன்னதி முன்பு, தங்க விளக்கு ஏற்றப்பட்டது. கோவில் கொடி மரத்திற்கு முன்பு பத்ர தீபங்கள் ஏற்றப்பட்டு, கோவில் வளாகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீபங்களை பக்தர்கள் ஏற்றி வழிபட்டனர்.
நாகை மாவட்டத்தில் திருகக்டையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், அமாவாசை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல், வரலாறுப்படி விமரிசையாக நிகழ்த்தப்பட்டன. அபிராமி பட்டரின் சிலை அமைகக்கப்பட்டு, அம்மன் முன் அபிராமி அந்தாதியை ஓதுவார்கள் பாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள பிரித்திரியங்கா தேவி ஆலயத்தில், அம்மனுக்கு 2019 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு மாஹா யாகம் நடத்தப்பட்டது. முன்னதாக, அம்மனுக்கும் காலபைரவருக்கும் அபிஷேகம் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவிலில், 10 ஆயிரம் தீபம் ஏற்றி, ஏராளமான பக்தர்கள் பதர தீப வழிபாடு நடத்தினர்.