தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முருகன் கோயில்களில் தைப்பூச விழா : ஏராளமான பக்தர்கள் காவடி ஏந்தி வழிபாடு
Jan 21 2019 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டனர்.
சென்னை வடபழநி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்தனர். இதேபோல் காவடி தூக்கி, அலகு குத்தி வந்த பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில் தைப்பூசம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் காவடி ஏந்தி, பால் குடங்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர், பாலதண்டாயுதபாணி சுவாமிகளுக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற குடவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில், தைப்பூச திருத்தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.