மகரவிளக்கு பூஜை - சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு -
Jan 10 2019 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகரவிளக்கு பூஜையையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐய்யபன் கோவில் நடைதிறந்ததை தொடர்ந்து கடந்த 2-ந்தேதி இளம்பெண்கள் இருவர் ஐயப்பனை தரிசித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த சூழலிலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறையவில்லை. முழு அடைப்பு நாளான 3-ந்தேதி மட்டும் 57 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 4-ந்தேதி 54 ஆயிரம் பேரும், 5-ந்தேதி 51 ஆயிரம் பேரும், 6-ந்தேதி 45 ஆயிரத்து 500 பேரும் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெண்கள் உள்பட 9 பேர் எரிமேலி வாவர் மசூதிக்கு செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து அவர்களை கேரள போலீசார் கைது செய்தனர். இதனிடையே எரிமேலி வாவர் மசூதியின் நிர்வாக கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், வாவர் மசூதியில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.