சபரிமலை கோயிலில் பரிகார பூஜைகளுக்கு பிறகு நடை திறப்பு
Jan 2 2019 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை கோயிலில் பரிகார பூஜைகளுக்கு பிறகு நடை திறக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சபரிமலைக்கு செல்ல பெண்கள் முயன்றனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சூழலில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு பிந்து மற்றும் கனதுர்கா ஆகிய இரு பெண்களும் சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து பரிகார பூஜைகளுக்காக, சபரிமலை கோவில் சன்னிதானம் திடீரென மூடப்பட்டது. கோயில் தலைமை தந்திரி தலைமையில், பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து மூடப்பட்ட கோயில் நடை பரிகாரப் பூஜைகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது.
இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தது உண்மைதான் என கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் காவல்துறையினரின் முழு பாதுகாப்புடன் இந்த தரிசனத்தை செய்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் எவருக்கும் பாதுகாப்பை போலீஸ் கட்டாயம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.