உத்திரப்பிரதேசத்தில் களைகட்டும் கும்பமேளா - பக்தி பரவசத்துடன் குவிந்து வரும் சாதுக்கள்
Dec 27 2018 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்திரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவில் பங்கேற்பதற்காக, சாதுக்கள் குவிந்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா விழா, ஜனவரி மாதம் 15-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சாதுக்களும், சன்னியாசிகளும் குவிந்து வருகின்றனர். யானைகள், அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் அமர்ந்து இசை வாத்தியங்கள் முழங்க, உற்சாகத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, வழக்கத்தை விட இந்தாண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்கள் என எதிர்பார்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.