உத்தரகோசமங்கை கோவிலில், பலநூறுகோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நடராஜர் சிலையை கொள்ளையடிக்க முயற்சி - காவலாளியை அரிவாளால் தாக்கிய மர்ம கும்பலைப் பிடிக்க காவல்துறை தீவிரம்
Nov 4 2018 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற, திருஉத்திர கோசமங்கை ஆலயத்தில் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நடராஜர் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள உத்தரகோசமங்கையில் உள்ள திருஉத்தர கோசமங்கை மங்கள நாதர் ஆலயத்தில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய மரகதத்தால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஆண்டுதோறும், ஆருத்ரா தரிசனத்தன்று மட்டுமே நடராஜர் சந்நதி திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர், காவலாளி செல்லமுத்துவை அரிவாளால் தாக்கிவிட்டு, பலநூறு கோடி ரூபாய் மதிப்புடைய நடராஜர் சிலையை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான காவலாளி செல்லமுத்து கூச்சலிட்டதால், சக காவலர்கள் அங்கு ஓடி வந்ததால், மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.