பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற பாலாலயம்
Oct 28 2018 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
திருச்சியிலுள்ள பிரசித்த பெற்ற திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் பரிவார தெய்வங்கள், விமானங்கள், கோபுரங்கள் ஆகியவற்றிற்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி, கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலாலயம் இன்று நடைபெற்றது. நேற்று இரவு முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி இன்று 2ம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை வேள்விகள் பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தன. பின்னர் புனித நீரானது உற்சவ மூர்த்திகளின் நீதி தெளிக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பாலாலயம் சிறப்புடன் நடைபெற்றது.
வரும் 9-ஆம் தேதி திருவானைக்காவல் ஆலயத்தில் உள்ள முருகன், சண்டிகேஸ்வரர் விநாயகர், சனி பகவான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான முதற்கட்ட கும்பாபிஷேகமும், 12ம் தேதி ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி விமானங்களுக்கான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளன.