சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் உடனடியாக வெளியேற போலீசார் உத்தரவு - நடை சாத்தப்படுவதால் கூடுதல் பாதுகாப்பு
Oct 23 2018 10:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு, கேரள போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதித்து தீர்ப்பு வழங்கிய பிறகு, முதல் முறையாக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டது. செய்தியாளர்களும், சில பெண்களும் சபரிமலைக்கு சென்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். சில இடங்களில் கல்வீச்சுக்கள் நடைபெற்றன.
இன்று சபரிமலையில் நடை சாத்தப்பட உள்ளது. சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் உள்ள செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை, கேரள அரசுக்கு எச்சரித்துள்ளது. பதற்றத்தை தணிப்பதற்காக அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் வெளியேற வேண்டும் என்று கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இனி மண்டல பூஜைக்காக, கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.