மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா : புட்டுக்கு மண் சுமந்த லீலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Aug 24 2018 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் புட்டுக்‍கு மண் சுமந்த லீலையில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரையில் சிவனின் திருவிளையாடலை மையமாகக் கொண்ட நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான புட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து சொக்கநாதர், மீனாட்சிஅம்மன், பிரியா விடையுடன் ஆரப்பாளையம் வைகை ஆற்றோரம் உள்ள புட்டுத்தோப்பு சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினர். மேலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், திருவாதவூர் அருளாளர் மாணிக்கவாசகர் ஆகியோரும் எழுந்தருளியிருந்த சேதுபதி மண்டபத்தில் புட்டுத் திருவிழா பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00