புதுச்சேரி கெடங்கலி முத்துமாரியம்மன் ஆலய ஆடிமாத சிறப்பு அபிஷேக ஆராதனை : ஜப்பானை சேர்ந்த 40 பேர் உள்பட ஏராளமானோர் சாமி தரிசனம்
Jul 18 2018 4:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி சாமிபிள்ளைத் தோட்டம் கெடங்கலி முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடிமாத முதல் நாள் சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஜப்பானை சேர்ந்த 40 பேர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் கெடங்கலி முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் நாளான்று ஜப்பானில் இருந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு ஆடி முதல் நாளன்று ஜப்பான் நாட்டை சேர்ந்த குறிஞ்சிச்செல்வன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட ஜப்பானியர் புதுச்சேரி வந்து கெடங்கலி முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பட்டாடை உடுத்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. ஜப்பான் நாட்டினருக்கு இந்து முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.