திருச்சியில் மணப்பாறை அருகே கோவில் திருவிழா : 100 ஆண்டுகளுக்கு பின் எருது விடும் நிகழ்ச்சி
Jul 15 2018 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணப்பாறை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு 100 ஆண்டுகளுக்கு பின் எருது விடும் திருவிழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வீ.பெரியப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மாயம்பெருமாள், ஸ்ரீ வைரப்பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 100 ஆண்டுக்கு பின் எருது விடும் திருவிழா நடைபெற்றது. எருதுகள் சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு அழைத்துச்சென்று அங்கிருந்து வழிபாட்டு தளத்தை நோக்கி ஒரே நேர்த்தில் அவிழ்த்துவிடப்பட்டன. அந்த எருதுகள் கொத்து கம்பு பூத்தாண்டும் பகுதி என எல்லை வரையறுக்கப்பட்ட பகுதியில், விரித்து வைக்கப்பட்ட துண்டை முதலில் ஓடி வந்து தாண்டிச்செல்லும். அப்போது, முதலாவதாக வந்த எருதுமேல் மஞ்சள் பொடி தூவி அடையாளம் காணப்படும்.