காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா : பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து வழிபாடு
Jun 27 2018 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு மாங்கனிகளை இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரை ஈசன் அம்மையே என்று அழைத்ததாகவும் கூறப்படுவதுண்டு. அந்தவகையில், புகழ்பெற்ற காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழா ஜுன் 25ம் தேதி புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோயிலில் தொடங்கியது. அம்மையாரின் திருமண நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ஸ்ரீ பிச்சாண்டவர் பவழக்கால் விமானத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து பட்டுசாத்தி சுவாமியை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாங்கனிகளை வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர்.