திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை மூத்த குடிமக்கள் - மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிறப்பு தரிசனம்
Feb 12 2018 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை, மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச சிறப்பு தரிசனம் வழங்கப்பட உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கு, மாதந்தோறும் இரண்டு நாட்கள் இலவச சிறப்பு தரிசனம் வழங்கி வருகிறது.
அதன்படி நாளை, மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச சிறப்பு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், பிற்பகல் 2 மணிக்கு இரண்டாயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என, நாளை மட்டும் நான்காயிரம் பேருக்கு இலவச சிறப்பு தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை, பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.