மார்கழி மாதம் தொடங்கியதையடுத்து திண்டுக்கலில் உள்ள கோவில்களில் சிறப்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை - ஆயிரக்கணக்கான பெண்கள் பக்தியுடன் பங்கேற்பு
Dec 16 2017 11:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மார்கழி மாதம் தொடங்கியதையடுத்து திண்டுக்கலில் உள்ள கோவில்களில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் பக்தியுடன் இதில் பங்கேற்றனர்.
மாதங்களில் கடவுள்களின் மாதமாக மார்கழி மாதம் உள்ளது. இந்த காலங்களில் ஓசோன் மண்டலம் பூமிக்கு அருகில் இருப்பதால் இந்த நேரங்களில் பெண்கள் கண்விழித்து கோலம் இடுவதால் தங்களது உடல் நோய்கள் விலகும் என்பது விஞ்ஞானம். அந்த வகையில், இன்று மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, பெண்கள் வீடுகள் தோறும் கோலமிட்டு மார்கழி மாதத்தை வரவேற்றனர். தொடர்ந்து இம்மாதத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் விளக்கு பூஜை செய்வது வழக்கம். திண்டுக்கல்லில் உள்ள ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில், ஸ்ரீ அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் விளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் பக்தியுடன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தூத்துக்குடியில் சிவன் கோயில், பெருமாள் கோயில் மற்றும் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.