கார்காவயல் ஸ்ரீ ஆதிசிவசக்தி சித்தர் ஞானபீட கோயிலில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி : 10,008 பெண்கள் கலந்துகொண்டு 10,008 விளக்குகளை ஏற்றி சிறப்பு திருவிளக்கு பூஜை
Oct 30 2017 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவயல் ஸ்ரீ ஆதிசிவசக்தி சித்தர் ஞானபீட கோயிலில், கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக, பத்தாயிரத்தெட்டு பெண்கள் கலந்துகொண்டு பத்தாயிரத்து எட்டு விளக்குகளை ஏற்றி, சிறப்பு திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலத்தில், ஆயிரத்து 500 திருவிளக்கு பூஜை, 30 நொடிகளில் நடத்தப்பட்டு உலக சாதனையாக இருந்துவரும் நிலையில், அதனை முறியடிக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவயல் ஸ்ரீ ஆதிசிவசக்தி சித்தர் ஞானபீட கோயிலில், பத்தாயிரத்தெட்டு பெண்கள் கலந்துகொண்டு பத்தாயிரத்து எட்டு விளக்குகளை 30 நொடிகளில் ஏற்றி, சிறப்பு திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.
லண்டனிலிருந்து வந்த கின்னஸ் சாதனை நிறுவனத்தின் நீதியரசர் முன்னிலையில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. மேலும், உலக மக்கள் நலன் வேண்டியும், டெங்கு காய்ச்சலிலிருந்து அனைவரும் விடுபடவும், விவசாயம் செழிக்கவும், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் இந்த வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ், ஞானபீடத்தின் சித்தர் ருத்ரசுவாமிகளிடம் வழங்கப்பட்டது.