சென்னையில் காளி மாதா பூஜை : பெங்கால் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்
Oct 20 2017 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சென்ட்ரல் அருகே, காளி மாதா பூஜை நடைபெற்றது. பெங்கால் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தீப ஒளி திருநாளையொட்டி, சென்னை சென்ட்ரல் அருகே, காளி மாதா பூஜை நடைபெற்றது. பெங்கால் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் இந்தப் பூஜையினை, தமிழக முன்னாள் காவல்துறை தலைவர் டெசோ பிரியா முகர்ஜி, தனது குடும்பத்துடன் பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்த பூஜையில் தாங்கள் செய்யும் தொழில் சார்ந்த பொருட்களை படைத்து வழிபாடு செய்தனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த பூஜையின் முதல் நாளான நேற்று, 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்றன.