கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது
Mar 26 2017 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் ஆகியவற்றிற்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதையடுத்து திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கார்களில் தங்கி இருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். மேலும் தரிசனத்துக்கு 15 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.