மகா சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Feb 25 2017 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகா சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மகா சிவராத்திரியையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், வடக்கு மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஈசானிஸ்வரருக்கு பால், சந்தனம், மஞ்சள், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் அருகே உள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி நடராஜ பெருமாள் - சிவகாமி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 48 திரவியங்களால் அபிஷேக நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவில் திருப்பூர், பல்லடம், உடுமலை, சத்தியமங்கலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் மாசித் திருவிழா வருகிற 1-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. அதனைதொடர்ந்து அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெறவுள்ளது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் மாதம் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல்மலையனூர் மாசி திருவிழா கொடியேற்றதுடன் வெகு சிறப்பாக தொடங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா 28-ம் தேதி நடைபெறவுள்ளது.