ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு - நம்மாழ்வார் மோட்சம் அளிக்கும் வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Jan 19 2017 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நம்மாழ்வார் மோட்சம் அளிக்கும் வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் நிறைவுநாளான நேற்று, அரங்கன் திருவடிகளில் அமர்ந்து நம்மாழ்வார் மோட்சம் அடைவதை சித்தரிக்கும் வைபவம் நடைபெற்றது. மாலை, கஸ்தூரி, திருமண் காப்புகளை ஆழ்வாருக்கு நம்பெருமாள் அளிக்கும் காட்சி இடம்பெற்றது. தன்னை சரணடைந்தவர்களுக்கு இறைவன் தன்னையே அளிப்பான் என்பதை விளக்கும் வகையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, நம்பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.