எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கிய பக்தர்கள் - தென்காசி அருகே அம்மன்கோயில் விழாவில் விநோதம்
Jan 18 2017 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தென்காசியை அடுத்த அருணாப்பேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அழகுமுத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பிரசித்திப் பெற்ற இந்த ஆலயத்தில் திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. 3 டன் விறகுகளை அடுக்கி தீ மூட்டி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொளுந்துவிட்டு எரிந்த தீயில் கோயில் நூற்றுக்கணக்கானோர் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.