தூத்துக்குடி புனித அந்தோனியார் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கொடியேற்றதுடன் கோலாகலமாக தொடங்கியது
Jan 17 2017 8:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டி பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டுக்கான திருவிழா கொடியேற்றதுடன் வெகு சிறப்பாக தொடங்கியது. முன்னதாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடிபட்டம், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஆலய கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த சேவுகம்பட்டியில் உள்ள சோலை பெருமாள்சாமி கோயிலில், வாழைப்பழம் சூறை விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் இந்த விழாவிவையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேறியதால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைப் பழங்களை வைத்து வழிபாடு நடத்தி பின்னர், அவற்றை சூறை விட்டனர்.