திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஸ்வைப் இயந்திரம் அறிமுகம்
Dec 4 2016 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஸ்வைப் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு சமீபத்தில் செல்லாது என அறிவித்தது. இதனையடுத்து நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை செலுத்துவதற்கு வசதியாக ஸ்வைப் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஸ்வைப் இயந்திரம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.