கடலூர் புஷ்பகிரி மலையாண்டவர் கோயில் கும்பாபிஷேக விழா : பல்லாயிரக்கணக்கானோர் சுவாமியை மனமுருக வழிபட்டனர்
Dec 4 2016 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் புஷ்பகிரி மலையாண்டவர் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் சி.என். பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ் புஷ்பகிரி மலையாண்டவர் கோயிலில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில், 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக்ஷாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர், சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு அபிஷே க, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. எம்.சி. சம்பத் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, சுவாமியை மனமுருக வழிபட்டனர்.