தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த புனித சவேரியார் தேவாலயங்களில் வெகுவிமரிசையாக நடைபெற்ற ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்
Dec 3 2016 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை, நாகை உட்பட தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த புனித சவேரியார் தேவாலயங்களில், ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியாரின் ஆலயத்தில், ஆண்டுப் பெருவிழா, கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவேரியாரின் திருவுருவப் பவனி நேற்று நடைபெற்றது. இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பழைமைவாய்ந்த புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், நவநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு திருப்பலியை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சவேரியார் சொரூபம் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த தேர் பவனியில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் தேவாலயத்தில், ஆண்டுப் பெருவிழாவின் 9-வது நாளான நேற்று, தேர் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது. அப்போது, ஏராளமானோர் தரையில் அங்கபிரதக்சனம் செய்து பிரார்த்தனை மேற்கொண்டனர். இவ்விழாவில், உள்ளூர் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்திலிருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். விழாவின் 10-வது நாளான இன்று, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.