முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீமெய்கண்ணுடையாள் அம்மனுக்கு பாலாபிஷேகம்
Oct 26 2016 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீமெய்கண்ணுடையாள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு, முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாகச் சென்று, முருகன் கோயிலை வலம் வந்து, விராலிமலை கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமெய்கண்ணுடையாள் அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில், அமைச்சர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பெருந்திராளான பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.